விவசாயத்தின் சிறப்பையும், உழவர்களின் உழைப்பையும் போற்றும் கவிதைகள் இங்கே: மண்ணின் விஞ்ஞானி விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்... மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே... உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே..... தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே! உழைப்பின் உருவம் பல குபேரனும் சோற்றில் கை வைக்க, தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து பாடுபடுபவன், இணையில்லா விவசாயி! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், எனும் பெரியோரின் வாக்கு படியும், சிந்தாமல் சிதறாமல் தான் பெற்ற பிள்ளை போல பேணி வளர்ப்பான் விவசாயி! மண்ணின் மைந்தன் கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து, புழுதி பிடித்து உரண்டு புரண்டு உறவாடுகின்றன!☁️ மண்! மனிதனின் முதல் தோழன், மண்! மனிதனின் கடைசி எதிரி! விவசாயம் காப்போம் விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்!
Comments
Post a Comment