tamil 4

வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

Comments

Popular posts from this blog

Sriram

Viva shayam 🌾🌾🌾

tamil 3