Posts

Tamil5

விவசாயம் காப்போம்......................... மண்ணின் விஞ்ஞானி விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்... மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே... உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே..... தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே!  🌾🌾🌾

tamil 4

வீரம் மரப்புலி உடலின், மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90) 2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே எலிமுயன்றனையராகி உள்ளதம் வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190) 3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா? நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் இலை; வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51) 4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196 5.சான்றோர் சன்றோருடன் சேருவர் என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218) 6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!! ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும்...

tamil 3

விவசாயத்தின் சிறப்பையும், உழவர்களின் உழைப்பையும் போற்றும் கவிதைகள் இங்கே: மண்ணின் விஞ்ஞானி விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்... மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே... உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே..... தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே!  உழைப்பின் உருவம் பல குபேரனும் சோற்றில் கை வைக்க, தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து பாடுபடுபவன், இணையில்லா விவசாயி! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், எனும் பெரியோரின் வாக்கு படியும், சிந்தாமல் சிதறாமல் தான் பெற்ற பிள்ளை போல பேணி வளர்ப்பான் விவசாயி!  மண்ணின் மைந்தன் கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து, புழுதி பிடித்து உரண்டு புரண்டு உறவாடுகின்றன!☁️ மண்! மனிதனின் முதல் தோழன், மண்! மனிதனின் கடைசி எதிரி!  விவசாயம் காப்போம் விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்! 

Viva shayam 🌾🌾🌾

சேறு கண்டால் தான்....  சோறு கான முடியும்.... உயிர் விதைப்பவன் கடவுள் என்றால் உயிர் வாழ விதை விதைபவனே                       கடவுளே!!!.... விவசாயம் தொழில் அல்ல  அது ஒரு "வாழ்வியல்"!!!...

Sriram

குடிசைதான்! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை புதுமையல்ல கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவிஒருத்தி ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான்........